செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் சமந்தா, இயக்குனர் ராஜமௌலி இடையே திடீர் மோதல்… டுவிட்டரில் பரபரப்பு…!

சமந்தா, இயக்குனர் ராஜமௌலி இடையே திடீர் மோதல்… டுவிட்டரில் பரபரப்பு…!

சமந்தா, இயக்குனர் ராஜமௌலி இடையே திடீர் மோதல்… டுவிட்டரில் பரபரப்பு…! post thumbnail image
ஒரு சர்ச்சை முடிந்த நிலையில், அடுத்த சர்ச¢சையில் சிக்கியுள்ளார் சமந்தா. வழக்கமாக தென்னிந்திய ஹீரோயின்கள், சர்ச்சைகளில் சிக்குவது போல் பேட்டி அளிப்பது, கருத்து சொல்வதை தவிர்ப்பார்கள். ஆனால் அதற்கு எதிர்மாறாக இருக்கிறார் சமந்தா. டுவிட்டரில் சில மாதங்களுக்கு முன் மகேஷ்பாபு நடித்த படத்தின் போஸ்டரை விமர்சித்து கருத்து வெளியிட்டார். இதனால் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் சமந்தாவை கடிந்துகொள்ள, பதிலுக்கு சமந்தாவின் காதலர் சித்தார்த் அந்த ரசிகர்களை காய்ச்சி எடுக்க இண்டஸ்ட்ரியே பரபரப்பானது. மகேஷ்பாபு சமந்தா இடையே பனிப்போர் நடக்கும் அளவுக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்நிலையில் ஒரு விழாவில் மகேஷ்பாபுவை சந்தித்த சமந்தா, அவரிடம் பக்கத்தில் அமர்ந்து சிரித்து பேசி அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் புது விவகாரத்தை அவர் கையில் எடுத்திருக்கிறார். டுவிட்டரில் 2 நாட்களுக்கு முன் அவர் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். நான் ஈ படத்தில் நான் ஹீரோயினாக நடித்தேன். அந்த பட டைரக்டர் ராஜமவுலி இப்போது தெலுங்கில் பாஹுபாலி படத்தை இயக்கி வருகிறார். இத¤ல் நடிக்க என்னை அவர் தேர்வு செய்யவில்லை என வருத்தம் தெரிவித்தார். பாஹுபாலி படத்தில் நீங்கள் ஏன் நடிக்கவில்லை என ரசிகர்கள் சிலர் கேட்டதால் இப்படி சமந்தா கூறிய¤ருந்தார். இதை படித்துவிட்டு ராஜமவுலி டென்ஷன் ஆகிவிட்டாராம்.

காரணம், படத்தில் அனுஷ்கா ஹீரோயின் என்றாலும் சில குறிப்பிட்ட காட்சிகளில் நடிக்க சமந்தாவிடம் ராஜமவுலி தேதி கேட்டாராம். ஆனால் அவர் பிசி என கூறியுள்ளார். கொதித்துப்போன ராஜமவுலி உடனே டுவிட்டரில், நான் உன்னிடம் (சமந்தாவிடம்) நடிக்க கேட்டிருந்தேன். நீதான் தேதி இல்லை. கால்ஷீட் ஒதுக்க முடியாது என சொன்னாய். இப்போது உன் ரசிகர்களின் கோபத்துக்கு என்னை ஆளாக்க பார்க்கிறாயா? என பொரிந்து தள்ளியிருக்கிறார். இதனால் ரசிகர்களின் கோபம், சமந்தா பக்கம் திரும்பியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி