செய்திகள்,திரையுலகம் நள்ளிரவில் சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டிய ஹீரோ ஹீரோயின்!…

நள்ளிரவில் சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டிய ஹீரோ ஹீரோயின்!…

நள்ளிரவில் சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டிய ஹீரோ ஹீரோயின்!… post thumbnail image
சென்னை:-மறந்தேன் மெய்மறந்தேன் படத்திற்கு பிறகு ஆதி நடிக்கும் படம் யாகாவராயினும் நாகாக்க. இடையில் வல்லினம், கோச்சடையான் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். ஆதிக்கு ஜோடியாக நடிப்பவர் கன்னட நடிகை நிக்கி கல்ராணி.

1983 என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி, ஓம் சாந்தி, வெள்ளிமூங்கா படங்களில் நடித்தார் இரண்டு கன்னட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இரண்டு கன்னட படங்களில் நடித்து வருகிறார்.இந்தப் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்ட்டரை ஜூலை 16 சென்னை முழுவதும் ஒட்டப்பட்டது. படத்தின் ஹீரோ ஆதியும், ஹீரோயின் நிக்கியும் தாங்களே பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஒட்ட தீர்மானித்தனர் அதன் படி கடந்த இரண்டு நாட்களாக இரவில் சென்னை நகரை சுற்றி சுற்றி வந்து எங்கெங்கு போஸ்டர் ஒட்டுவது என்று தேர்வு செய்தார்கள்.

அப்படி தேர்வு செய்த இடத்தில் நள்ளிரவு போஸ்டர் ஒட்டினார்கள்.இது எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. நான் நடித்த படத்துக்கு நானே போஸ்டர் ஒட்டியிருக்கிறேன். படத்தில் என்னுடைய கேரக்டர் பற்றி சொல்ல இயலாது. தமிழில் இது எனக்கு முக்கியமான படமாக இருக்கும் என்கிறார் நிக்கி கல்ராணி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி