செய்திகள்,திரையுலகம் விஜய்க்கு ஜோடியாக நடிப்பதை உறுதி செய்தார் ஸ்ருதிஹாசன்!…

விஜய்க்கு ஜோடியாக நடிப்பதை உறுதி செய்தார் ஸ்ருதிஹாசன்!…

விஜய்க்கு ஜோடியாக நடிப்பதை உறுதி செய்தார் ஸ்ருதிஹாசன்!… post thumbnail image
சென்னை:-‘கத்தி‘ படத்தைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தமாகியுள்ளார். ‘கத்தி’ படப்பிடிப்பு முடிந்தவுடன், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இயக்குநர் சிம்புதேவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களைத் தேர்வு செய்து வருகிறார்கள்.

விஜய்யோடு நடிகை ஸ்ரீதேவி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது அவரது தரப்பில் இருந்து உறுதிசெய்யப்பட்டது.இந்தப் புதிய படத்தில் விஜய்க்கு ஜோடியாக தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா அல்லது ஸ்ருதிஹாசன் ஆகிய மூவரில் ஒருவர்தான் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. பின்னர், வேலாயுதம் படத்தை அடுத்து மீண்டும் இப்படத்தில் விஜய்யுடன் நடிகை ஹன்சிகா ஜோடி சேர்கிறார் என்று கூறப்பட்டது.

ஆனால் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருக்கும் படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதா நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் சார் ஜோடியாக நடிக்க இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். சரித்திர படத்தில் நடிப்பதற்கான நேரமிது என்று நடிகை ஸ்ருதிஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி