மும்பை:-ஹாலிவுட்டில் வெளிவந்த ‘நைட் அன்ட் டே’ என்ற படத்தின் ரீமேக்காக இந்தியில் தயாராகி வரும் ‘பேன்ங் பேன்ங்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் நடிகை கத்ரீனா கைப்பை படப்பிடிப்பில் நடிகர் ஹிரித்திக் ரோஷன் நிஜமாகவே அடித்து விட்டதால் முகத்தில் வீக்கமடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் கத்ரீனா கைப். அதன் பின் உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விட்டுள்ளது.
இதன் பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கத்ரீனாவை மருத்துவர்கள் ஓய்வு எடுக்கும்படி வலியுறுத்தினார்களாம்.படப்பிடிப்பில் ஒரு ஆக்ஷன் காட்சியைப் படமாக்கும் போது கத்ரீனாவை, ஹிரித்திக் காப்பாற்றுவது போல் காட்சி படமாக்கப்பட்ட போது அவருடைய கை, கத்ரீனா மீது வேகமாகப் பட்டுவிட்டதாம். அதனால் அவரது முகம் வீங்கிப் போய்விட்டிருக்கிறது. தற்போது கத்ரீனா ஓய்வில் இருக்கிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி