செய்திகள்,திரையுலகம் திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த உதயதாரா!…

திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த உதயதாரா!…

திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த உதயதாரா!… post thumbnail image
சென்னை:-மலையாள நடிகையான உதயதாரா ‘கண்ணும் கண்ணும்’ படத்தில் பிரசன்னா ஜோடியாக அறிமுகமானார். தி.நகர், மலையன், விலை உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர் 2012ம் ஆண்டு துபாயை சேர்ந்த விமான பைலட் ஜுபின் ஜோசப்பை திருமணம் செய்து கொண்டு செட்லாகிவிட்டார்.

இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவர் தற்போது நடித்து வரும் படம் பிரமபுத்திரா. உதயதாராவுடன் முரளி, டாக்டர் தினேஷ், கங்கேஷ், அக்ஷிதா என்ற புதுமுகங்களும் நடிக்கிறார்கள். தாமஸ் என்ற புதுமுகம் இயக்குகிறார். படப்பிடிப்புகள் முடிந்து, படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி