செய்திகள்,திரையுலகம் இணைந்து பணியாற்றும் சி.வி.குமார்,ஞானவேல் ராஜா!…

இணைந்து பணியாற்றும் சி.வி.குமார்,ஞானவேல் ராஜா!…

இணைந்து பணியாற்றும் சி.வி.குமார்,ஞானவேல் ராஜா!… post thumbnail image
சென்னை:-தற்போது தமிழ் சினிமாவில் பரபரப்பாக இயக்கிக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா மற்றும் சி.வி.குமார். தனது ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் மூலம் சூர்யா, கார்த்தி படங்களை மாறி மாறி தயாரித்து வரும் ஞானவேல்ராஜா தற்போது கார்த்தி நடிக்கும் மெட்ராஸ் படத்தை தயாரித்து வருகிறார். அடுத்து சூர்யா நடிக்கும் மாஸ் படத்தை தயாரிக்க இருக்கிறார்.

தனது திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் வி.சி.குமார் அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுபட்டி என தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வருகிறார்.
இந்த இருவரும் இணைந்து அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறார்கள். ஞானவேல்ராஜாவின் இன்னொரு தயாரிப்பு நிறுவனமான ஆதனா ஆர்ட்ஸ்சும், சி.வி.குமாரும் இணைகிறார்கள்.

முண்டாசுபட்டி வெற்றியை தொடர்ந்து விஷ்ணு நடிக்கும் ரொமான்ஸ் காமெடி படத்தை தயாரிக்கிறார்கள். சூது கவ்வும் நலன் குமாரசாமியின் உதவியாளர் ரவி இயக்குகிறார். பாடகர் பிரதீப் குமார் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். ஹீரோயின் மற்ற கலைஞர்கள் டெக்னீஷயன்கள் இன்னும் முடிவாகவில்லை. செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி