செய்திகள் மனைவிக்கு கேன்சர் வரவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிய கணவன்!…

மனைவிக்கு கேன்சர் வரவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிய கணவன்!…

மனைவிக்கு கேன்சர் வரவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிய கணவன்!… post thumbnail image
லண்டன்:-வடக்கு லண்டன் பெர்னட் குடும்ப நீதிமன்றத்திற்கு ஒரு வித்தியாசமான வழக்கு வந்தது.பெர்னட் என்ற பகுதியை சேர்ந்த ஒரு பெண், தனது கணவன் தினமும் கடவுளிடம் எனக்கு கேன்சர் நோய் வரவேண்டும் என வேண்டிகொள்வதாகவும், இதனால் தான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் தனது கணவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி மர்சியாள் இதுபோன்ற ஒரு வழக்கை தனது வாழ்நாளில் சந்தித்தது இல்லை என்று கூறினார். கணவரிடம் அவர் நேரடியாக விசாரணை செய்தபோது, அவர் தான் கடவுளிடம் தனது மனைவி சொல்வதுபோல் ஒருபோதும் வேண்டியதில்லை என்றும், தனது மனைவி பொய் கூறுகிறார் என்றும் கூறினார்.

ஆனால் இந்த தம்பதிகளின் இரண்டு மகள்களும் தந்தைக்கு எதிராக சாட்சி கூறியதால், நீதிபதி கணவருக்கு தண்டனை கொடுக்க முடிவு செய்துள்ளார். அடுத்த வாரம் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்படும் எனத்தெரிகிறது.பெயர் வெளியிட விரும்பாத இந்த தம்பதிகள் இருவருமெ முஸ்லீம்கள் என்றும் இஸ்லாமிய மத முறைப்படி இவர்கள் திருமணம் செய்துகொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி