செய்திகள்,திரையுலகம் நடிகை ஹன்சிகாவின் பொழுதுபோக்கு!…

நடிகை ஹன்சிகாவின் பொழுதுபோக்கு!…

நடிகை ஹன்சிகாவின் பொழுதுபோக்கு!… post thumbnail image
சென்னை:-படப்பிடிப்புகளில் நடிகர்-நடிகைகளுடன் கடலை போடும் ஹன்சிகா, படப்பிடிப்பு முடிந்து விட்டால் பார்ட்டி, விழாக்கள் என்று தேவையில்லாமல் ஊர் சுற்றுவதில்லை. நேராக வீட்டிற்கு வந்து ஓய்வெடுப்பார். அல்லது அடுத்து நாளுக்கு தேவையான டயலாக்குகளை மனப்பாடம் செய்து தன்னை தயார்படுத்திக்கொள்வார்.

படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நாட்களில் வீட்டில் அமர்ந்து விதவிதமான ஓவியங்களை வரையத்தொடங்கி விடுவாராம். பள்ளிக்கூட காலத்தில் இருந்தே ஓவியம் வரைவது என்றால் ஹன்சிகாவுக்கு அலாதி பிரியம். அதனால் இப்போது அதுவே அவருக்கு ஹாபியாகி விட்டதாம். எங்காவது வெளியூர் செல்லும் இடங்களில் வித்தியாசமான லொகேசன் அல்லது சிலைகளைப்பார்த்தால், அதை தனது செல்போனில் பதிவு செய்து கொண்டு, பின்னர் அதில் தனது கற்பனைகளையும் கலந்து அதை ஓவியமாக்கி விடுவாராம்.

அப்படி தான் வரைந்த ஓவியங்களை எதிர்காலத்தில் கண்காட்சிகளில் வைக்க வேண்டும் என்ற திட்டமும் ஹன்சிகாவிடம் உள்ளதாம். மேலும், தான் வரைந்த சில சாமி படங்களை தனக்கு நெருக்கமான தோழிகளுக்கு பிறந்தநாள், திருமணம் என்று நடக்கும்போது அன்பளிப்பாகவும் வழங்கி விடுவாராம் ஹன்சிகா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி