செய்திகள்,திரையுலகம் தன் படத்திற்கு 108 பாட்டு போட்ட டி.ராஜேந்தர்!…

தன் படத்திற்கு 108 பாட்டு போட்ட டி.ராஜேந்தர்!…

தன் படத்திற்கு 108 பாட்டு போட்ட டி.ராஜேந்தர்!… post thumbnail image
சென்னை:-டி.ராஜேந்தர் தனது சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் ஒரு தலை காதல் என்ற படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். வழக்கம்போல கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே அவர்தான். ஒளிப்பதிவை மட்டும் சாலை சகாதேவன் செய்கிறார்.

இதில் ஹீரோவாக நடிக்க டி.ராஜேந்தர் பத்து கிலோ எடை குறைத்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக இரண்டு மும்பை அழகிகள் ஹீரோயினாக நடிக்கிறார்கள். படிக்காத மதுரை கிராமத்து இளைஞராக டி.ஆர் நடிக்கிறார். இதற்காக தனது பாணியில் மதுரை தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார். மதுரை முத்து, கருணாஸ், தம்பி ராமையா ஆகியோரும் நடிக்கிறார்கள்.படிக்காமல் கிராமத்தில் விவசாய வேலையே உயிர் மூச்சு என்று வாழ்கிறார் டி.ராஜேந்தர். அவரது முறைப்பெண்தான் அவருக்கு மனைவி என்று பெரியவர்கள் சொல்லி சொல்லி வளர்க்கிறார்கள். ஆனால் முறைப்பெண்ணோ பெரிய படிப்பு படித்துவிட்டு வந்து படிக்காத டி.ஆரை முறைத்துக் கொண்டே திரிவார்.

டிஆரோ அவரை ஒரு தலையாய் காதலித்து உருகிக் கொண்டு திரிவார். அதே ஊரில் உள்ள கிராமத்து பெண் ஒருத்தி டி.ஆரை உருகி உருகி ஒருதலையாய் காதலித்துக் கொண்டிருப்பார். இதில் யார் யாரோடு சேர்கிறார்கள் என்பதுதான் கதை.என்னோட படம் என்றாலோ பாட்டுதான் முதல்ல நிக்கும். அதுவும் இது நான் பண்ற முதல் கிராமத்து படம். 108 பாட்டுகளை போட்டு. அதிலிருந்து 7 பாட்டை செலக்ட் பண்ணி படத்துல யூஸ் பண்றேன். படத்துக்காக உடம்பையும், தாடியையும் டிரிம் பண்ணியிருக்கேன். இதுவரை 65 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டது. ஒரு நல்ல நாளில் படத்தை அதிரடியா ரிலீஸ் பண்ணுவேன் என்கிறார் டி.ஆர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி