அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் கங்கையில் கழிவுகளைக் கலக்கும் தொழிற்சாலைகளை மூட மத்திய அரசு உத்தரவு!…

கங்கையில் கழிவுகளைக் கலக்கும் தொழிற்சாலைகளை மூட மத்திய அரசு உத்தரவு!…

கங்கையில் கழிவுகளைக் கலக்கும் தொழிற்சாலைகளை மூட மத்திய அரசு உத்தரவு!… post thumbnail image
புதுடெல்லி:-இந்தியாவின் புதிய பிரதமராக கடந்த மே மாதம் நரேந்திர மோடி பதவியேற்றபோது கங்கையை சுத்தப்படுத்துவதே தனது முதல் குறிக்கோளாக இருக்கும் என்று கூறியிருந்தார். இந்துக்களின் புனித நதி என்று கூறப்படும் கங்கையிலும், அதனுடைய துணை நதிகளிலும் ஏற்கனவே சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றுவரும்போதும் நேற்றைய கூட்டத்தில் இது பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டன.

அப்போது மொத்தம் 764 மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் 501 மில்லியன் கழிவு நீரை தினமும் வெளியேற்றுகின்றன என்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இவற்றில் 704 தொழிற்சாலைகள் தேசிய கங்கை நதி வடிநில ஆணையத்தால் ஆய்வு செய்யப்பட்டு அவற்றில் 165 தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ் அனுப்பட்டன, இவற்றில் 48 தொழிற்சாலைகளை மூடுவதற்கான உத்தரவுகளும் இணைந்திருந்தன என்று நீர்வள அமைச்சரும், கங்கை நதி தூய்மைப்படுத்தும் திட்டத்தின் தலைவருமான சந்தோஷ் குமார் நேற்று தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். மேலும், தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகளின் தரத்தை மேம்படுத்தும் செயல்திட்டத்தை திறமையாக கண்காணிக்குமாறு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன.

இவர்களின் தரக் கட்டுப்பாட்டை மீறும் தொழிற்சாலைகள் மீது இந்த ஆணையம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த 2010-ம் ஆண்டிலேயே கங்கை நதி ஆணையம் கேட்டுக்கொண்டதன்பேரில் லோஹரினாக் பாலா, பாலா மனேரி, பைரோன்கடி ஆகிய நீர்மின் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.ஒரு விரிவான வடிநில மேலாண்மைத் திட்டமும் கான்பூர், டெல்லி, சென்னை, மும்பை, கரக்பூர், கௌஹாத்தி மற்றும் ரூர்க்கி இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பினால் தயாரிக்கப்பட்டு வருகின்றது கங்கை பகுதியின் தண்ணீர் மற்றும் எரிசக்தி தேவைகளைக் கணக்கில் கொள்ளும் அதே சமயம் நதியின் பாதுகாப்பு போன்ற அடிப்படை அம்சங்களையும் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த அறிக்கைத் தயாரிப்பு வரும் ஆகஸ்ட் இறுதிக்குள் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி