செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் 29வது முறையாக பிலிம் பேர் விருது பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்!…

29வது முறையாக பிலிம் பேர் விருது பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்!…

29வது முறையாக பிலிம் பேர் விருது பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்!… post thumbnail image
சென்னை:-61-வது தென்னிந்திய மொழிப் படங்களுக்கான ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.இதில் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், மகேஷ் பாபு, ஹிந்தி நடிகை ரேகா, தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், முரளி கோபி, சத்யராஜ், சமந்தா, நயன்தாரா, அதர்வா, பூஜாகுமார், தன்ஷிகா, லட்சுமிராய், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், இயக்குனர் பாலா உள்ளிட்ட பல்வேறு தென்னிந்திய நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் தமிழின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றார். ‘கடல்’ மற்றும் தனுஷ் நடித்த ‘மரியான்’ படங்களுக்கு சிறப்பாக இசையமைத்தமைக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. விழா மேடைக்கு வந்த ரஹ்மானிடம், இது உங்களுக்குக் கிடைக்கும் எத்தனையாவது பிலிம் பேர் விருது? என்று கேட்டதும், ஏ.ஆர்.ரஹ்மான் புன்னகைத்தவாறு இது எனக்குக் கிடைக்கும் 29-ஆவது விருது என்றார் .ரஹ்மானின் இந்த பதிலை கேட்டதும் அரங்கமே கரகோஷத்தில் அதிர்ந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி