செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் பாதுகாப்பு போலீசாரிடம் சிக்கிய நடிகை திரிஷா!…

பாதுகாப்பு போலீசாரிடம் சிக்கிய நடிகை திரிஷா!…

பாதுகாப்பு போலீசாரிடம் சிக்கிய நடிகை திரிஷா!… post thumbnail image
சென்னை:-நடிகை திரிஷா ஐதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார்.அப்போது, ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் அணிந்திருந்த திரிஷா பெரிய அளவில் ஒரு கூலிங் கிளாஸ் கண்ணாடியை அணிந்திருந்தாராம். இதனால் சுத்தமாக அவர் ஆள் அடையாளமே தெரியாமல் இருந்தாராம். விஐபி பயணிகள் விமானத்துக்காக காத்திருக்கும் பகுதியில் நீண்டநேரமாக திரிஷா அமர்ந்திருந்ததை கண்காணித்த சில போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரித்தார்களாம்.

அப்போது தனக்கான அடையாள அட்டை அவர்களிடம் எடுத்து காண்பித்தாராம் திரிஷா. அதையடுத்தே அவர் நடிகை த்ரிஷா என்பது அவர்களுக்கு தெரியவந்திருக்கிறது. பின்னர் பாதுகாப்பு கருதியே தாங்கள் இந்த விசாரணையில் ஈடுபட்டதாக அவர்கள் சொல்ல, நீங்கள் உங்கள் கடமையைத்தானே செய்தீர்கள் என்று சிரித்துக்கொண்டே அவர்களிடமிருந்து விடைபெற்றாராம் திரிஷா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி