செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலகக் கோப்பை 2014ல் சிறந்த வீரராக மெஸ்சி தேர்வு!…

உலகக் கோப்பை 2014ல் சிறந்த வீரராக மெஸ்சி தேர்வு!…

உலகக் கோப்பை 2014ல் சிறந்த வீரராக மெஸ்சி தேர்வு!… post thumbnail image
ரியோ டி ஜெனிரோ:-தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இந்த ஆண்டிற்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி கோலாகலாமாக நேற்று நடைபெற்று முடிந்தது. ஜெர்மனியும், அர்ஜென்டினாவும் மோதிய இறுதிப் போட்டியில் 1-0 என்ற கணக்கில் ஜெர்மனி வென்று கோப்பையைக் கைப்பற்றியது. அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்சி சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டு தங்கப் பந்தினைப் பெற்றார்.

தங்களது அணியை இறுதிப் போட்டிவரை கொண்டுவந்த இந்த வீரர் லீக் ஆட்டங்களில் அர்ஜென்டினா எடுத்திருந்த 6 கோல்களில் நான்கை அடித்திருந்தார். அதுபோல் சுவிட்சர்லாந்துடன் ஏஞ்சல் டி மரியா கோல் அடிக்க உதவி செய்ததுடன் அரை இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்துடன் ஷூட்அவுட் வெற்றி பெற முதல் பெனால்டி முறையின் பொறுப்பையும் ஏற்றார். மேலும் போஸ்னியா, ஈரான், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கு எதிராக இதுவரை தொடர்ந்து நான்கு முறை சிறந்த வீரருக்கான விருதினை மெஸ்சி பெற்றுள்ளார்.

லீக் போட்டிகளுக்குப் பிறகு மெஸ்சியின் பங்கு சிறப்பாக இல்லை என்று பல நிபுணர்கள் கருதியபோதும் அர்ஜென்டினாவின் பயிற்சியாளர் அலெஜான்ட்ரோ சபெல்லா அவரது தேர்வை ஆமோதித்தார். சிறந்த வீர்கள் தேர்வில் ஏற்கனவே மெஸ்சி இருந்துள்ளார். இந்த முறையும் சிறப்பாக விளையாடி அர்ஜென்டினாவை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்தவருக்கு இந்தப் பரிசு வழங்கப்படுவது நியாயமானதுதான் என்று சபெல்லா குறிப்பிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி