செய்திகள் நூலகத்தில் விபசாரத்திற்கு அழைப்பு விடுத்த பெண்!…

நூலகத்தில் விபசாரத்திற்கு அழைப்பு விடுத்த பெண்!…

நூலகத்தில் விபசாரத்திற்கு அழைப்பு விடுத்த பெண்!… post thumbnail image
வாஷிங்டன்:-அமெரிக்காவின் நியூ காம்சையர் பகுதியில் ஒரு நுலகம் செயல்பட்டு வந்தது. நூலகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பட்டவர்கள் புத்தகங்களை எடுத்து படித்து கொண்டு இருந்தனர். அப்போது 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண் ஒவ்வொருவரிடமும் ஒரு பேப்பரில் ஒரு குறிப்பி எழுதி காட்டி கொண்டு இருந்தார் அனைவரும் அதை படித்து விட்டு அறுவெறுப்பு அடைந்தனர்.

தினமும் இதே அந்த பெண்ணின் தொழிலாக இருந்தது . இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது இது குறித்து அறிய ஒரு ரகசிய போலீஸ் அனுப்பி வைக்கபட்டார் அவரும் அந்த நூலகத்தில் புத்தகங்கல் படிக்க வந்தார்.அவர் வந்த நாள் அந்த பெண் அவருக்கும் அதே குறிப்பு எழுதிய பேப்பரை கொடுத்தது. அதை பெற்று கொண்ட ரகசிய போலீஸ் உடனடியாக அந்த பெண்ணை கைது செய்தார்.

அந்த இளம் பெண் மீது விபசாரத்திற்கு அழைப்பு விடுத்ததாக குற்றம் சாட்டபட்டது. பேப்பரில் எழுதி உளள குறிப்பில் பாலியல் சேவை செய்ய தயாராக இருப்பதாகவும் அதற்கு ஈடாக 60 அமெரிக்க டாலர் கொடுக்கவேண்டும் என்று அந்த குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.இதை கண்டதும் நூலகத்திற்கு வந்த அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். இங்கு விபசாரம் நடக்கிறது எனபது நம்ப முடியாதது. இங்கு மாணவர்கள் – ஆசிரியர்கள் என அனைவரும் வந்து புத்தகங்கள் படிக்கிறார்கள் என நூலகத்திற்கு தினமும் வரும் ஒருவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி