செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் சம்பள விசயத்தில் ரஜினியை மிஞ்சும் ஹிரித்திக் ரோஷன்!…

சம்பள விசயத்தில் ரஜினியை மிஞ்சும் ஹிரித்திக் ரோஷன்!…

சம்பள விசயத்தில் ரஜினியை மிஞ்சும் ஹிரித்திக் ரோஷன்!… post thumbnail image
மும்பை:-இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என ரஜினிகாந்த் தான் இருந்து வருகிறார். இவருடைய உண்மையான சம்பளம் என்ன என்பது யாருக்கும் சரியாகத் தெரியாது என்றாலும் சுமார் 50 கோடி வரையில் இருக்கும் என்று ‘எந்திரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பேச ஆரம்பித்தார்கள். படத்தின் வியாபாரத்திற்கேற்றபடிதான் அவருடைய சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது என்ற தகவலும் உண்டு.

இதனிடையே இந்தித் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வரும் ஹிரித்திக் ரோஷன் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தில் 50 கோடி ரூபாய் சம்பளம் பெறப் போவதாக பாலிவுட்டில் பரபரப்பாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். அஷுதோஷ் கௌரிகர் அடுத்து எடுக்கப் போகும் ‘மொகஞ்சதாரோ’ படத்தில் நடிப்பதற்காகத்தான் ஹிரித்தி அவ்வளவு சம்பளம் கேட்டிருக்கிறார் என்கிறார்கள்.

இந்தப் படம் ஒரு சரித்திரப் படமாக உருவாக உள்ளதாலும் நீண்ட நாட்கள் படப்பிடிப்பு நடைபெறலாம் என்ற விதத்திலுமதான் ஹிரித்திக் அவ்வளவு பெரிய தொகையை சம்பளமாகக் கேட்டிருக்கலாம் என்கிறார்கள். ஹிரித்திக் நடிக்கும் படங்களுக்கு உலகம் முழுவதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்தப் படம் ஒரு சரித்திரப் படம் என்பதால் நிச்சயம் எதிர்பார்ப்புக்கு மேலும் அமைய வாய்ப்பிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி