செய்திகள்,திரையுலகம் கிளாமருக்கு மாறும் ‘இவன் வேற மாதிரி’ சுரபி!…

கிளாமருக்கு மாறும் ‘இவன் வேற மாதிரி’ சுரபி!…

கிளாமருக்கு மாறும் ‘இவன் வேற மாதிரி’ சுரபி!… post thumbnail image
இவன் வேற மாதிரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுரபி. முதல்படத்திலேயே ஓரளவுக்கு நல்ல நடிகை என்று பெயர் பெற்ற சுரபி, அதன்பின் எந்த படங்களிலும் கமிட்டாகவில்லை, ஏன்னென்று கேட்டால் படிக்க போகிறேன் என்று டில்லி சென்றவர், இப்போது தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அவர் அளித்த பேட்டி இதோ…

* படிக்க போகிறேன் என்று டில்லி சென்றீர்களே…?

நான் படிச்சது, வளர்ந்தது எல்லாமே டில்லி தான், பி.எஸ்.எ., என்று சொல்ல கூடிய 4 வருட பைன் ஆர்ட்ஸ் பெயின்டிங் கோர்ஸ இப்போது தான் முடித்தேன். இந்தநேரத்தில் நிறைய கதைகள் வந்துகிட்டே இருக்கு, அதனால் சரின்னு கோடம்பாக்கம் வந்துட்டேன்.

* ‘இவன் வேற மாதிரி’ படத்தில ஹீரோயின் ரோல்ல நடிச்சிட்டு, இப்போது வேலையில்லா பட்டதாரி படத்தில் சிறப்பு தோற்றதில் வர காரணம்?

தனுஷ் சார் தான் என்னை கூப்பிட்டு என் ரோல் பத்தி சொன்னார், என்னை
மாதிரி ஒரு சாப்ட் முகத்துக்கு இந்த ரோல் சரியாக இருக்கும் என்று சொன்னார். கதை கேட்டேன், எனக்கும் பிடிச்சது சரின்னு சொல்லி நடிச்சேன்.

* இப்போது வேற படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு உள்ளீர்களா?

எனக்கு அவசரமே இல்லை, நிறைய டைம் இருக்கு, மெதுவா ஒரு ஒரு படமாக பண்ணலாம், இப்போது தெலுங்கில், இயக்குனர் கண்மணி இயக்கத்தில், சுந்தீப் கிஷன் நடிக்கும், படத்துக்கு நான் தான் ஜோடி. படத்தில் கொஞ்சம் கிளாமர் இருக்கும், என் வழக்கமான முகம் போய், இந்த படத்தில வேற லுக் தெரியும்.

* தமிழ் படத்தில் யார் கூட ஜோடி சேர ஆசைபடுரீங்க?

எனக்கு கமல் சார் ரொம்ப பிடிக்கும், அவர் கூட ஒரு படத்தில் நடிக்கணும் இது தான் என்னோட ஆசை.

* எப்போ தமிழ் பேசப் போறீங்க ?

இப்பதானே வந்திருக்கேன் ,சீக்கிரமே தமிழ் ,தெலுகு எல்லா மொழியும்
கத்துகிட்டு இனி கலக்கபோறேன் பாருங்க, நிறைய நல்ல நல்ல படங்களில்
நடிக்கணும் என்ற ஆசை இருக்கு என்று சொல்லி முடித்தார் சுரபி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி