செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் காரைக்குடியில் நடிகர் விஷாலால் ஏற்பட்ட பரபரப்பு…!

காரைக்குடியில் நடிகர் விஷாலால் ஏற்பட்ட பரபரப்பு…!

காரைக்குடியில் நடிகர் விஷாலால் ஏற்பட்ட பரபரப்பு…! post thumbnail image
நடிகர் விஷால் காரைக்குடி போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று புகார் அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:– நான் திரைப்பட படப்பிடிப்பு முடிந்து வந்து நான் தங்கியிருக்கும் அறையில் டி.வி. சேனல் பார்க்கும் போது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி லோக்கல் சேனல் அரசு கேபிளில் ஸ்ரீடி.வி.யில் வடகறி என்கிற புதுப்படமும், மஹாராஜா சேனலில், ‘‘உன் சமையல் அறையில்’’ என்கிற புதுப்படமும் ஒளிப்பரப்பாகி கொண்டு இருந்தது.

அதை பார்த்த நான் மிகுந்த வேதனை அடைந்து வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மூலம் சம்பந்தப்பட்ட இடத்திற்கே சென்று ஆய்வு செய்து அங்கு இருந்த ஊழியர்கள் மற்றும் ஒளிப்பரப்பு உடமைகளை பறிமுதல் செய்து வந்தோம். இதை விசாரித்து அந்த நிறுவனங்களில் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி