செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் மீண்டும் ஹரி, சூர்யா இணையும் சிங்கம் 3!…

மீண்டும் ஹரி, சூர்யா இணையும் சிங்கம் 3!…

மீண்டும் ஹரி, சூர்யா இணையும் சிங்கம் 3!… post thumbnail image
சென்னை:-இயக்குனர் ஹரியின் கைவண்ணத்தில் உருவான சிங்கம், சிங்கம்-2 படங்கள்தான் நடிகர் சூர்யாவை அதிரடியான ஆக்ஷன் ஹீரோவாக்கின. அதனால் அதையடுத்து சாப்ட்டான கதைகளில் சூர்யாவுக்கான ஆர்வம் குறைந்து போனது.அதனால், ரொமான்டிக், செண்டிமென்ட் கதைகளுடன் சிலர் சென்றபோது, இதெல்லாம் படத்தில் அனில் கொறிப்பது போன்று ஆங்காங்கே இருந்தால் போதும்.

ஆனால் கதையின் களம் ஆக்சன் சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் ஆக்சன் ஹீரோவாகி விட்ட நான் இனி அதிலிருந்து விடுபட முடியாது. ரசிகர்கள் அதை ஏற்க மாட்டார்கள் என்று கூறி விட்டார்.அதனால்தான், சிங்கம்-2 விற்கு பிறகு கெளதம்மேனன் உள்பட சில டைரக்டர்களின் அதிருப்திக்கு அவர் ஆளாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில்தான் லிங்குசாமி சொன்ன மும்பையை மையமாகக்கெண்ட ஸ்கிரிப்ட் சூர்யாவை வெகுவாக கவர்ந்தது.

சிங்கம் படத்தில் சென்னை தாதா பிரகாஷ்ராஜை துரத்தி துரத்தி அடித்தது போன்று இந்த படத்திலும், மும்பை தாதாக்களை பிரிச்சு மேய்கிறாராம் சூர்யா.
இந்த படமும் தன்னை இன்னொரு வலுவான இடத்துக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கும் சூர்யா, அடுத்து வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தில் நடிப்பவர், அதற்கடுத்து மீண்டும் ஹரி இயக்கும் படத்தில் அடுத்த ஆண்டில் நடிக்கிறார். அந்த படத்தின் கதையை இன்னமும் ஹரி சொல்லாதபோதும், அது சிங்கம் 3 வாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கிறாராம் சூர்யா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி