அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் இருந்த 37 விடுதலை!…

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் இருந்த 37 விடுதலை!…

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் இருந்த 37 விடுதலை!… post thumbnail image
ராமேசுவரம்:-ராமேசுவரம் மீனவர்கள் கடந்த மாதம் 29ம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்த 17 பேர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். கடந்த 5ம் தேதி ராமேசுவரம் மற்றும் மண்டபம் மீனவர் கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 20 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

இலங்கை சிறையில் உள்ள 37 மீனவர்களையும் அவர்களது விசைப்படகு களையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டு மென முதல் அமைச்சர் ஜெயலலிதாவும் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் கடிதம் எழுதினார்.இதனை தொடர்ந்து மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில் இலங்கை சிறையில் உள்ள 37 மீனவர் களும் இன்று காலை தலை மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்கள் அனைவரை யும் இலங்கை அரசின் பரிந்துரைப்படி விடுதலை செய்து மன்னார் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து 37 மீனவர்களும் இலங்கை கடற்படை யினரால் இந்திய கடற்படை வசம் இன்று ஒப்படைக்கப்படுவார்கள். அதன் பின்னர் அவர்கள் ராமேசுவரம் வந்து சேர்வார்கள்.மன்னார் கோர்ட்டின் உத்தரவால் ராமேசுவரம் மற்றும் மண்டபத்தில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி