சென்னை:-நடிகை நஸ்ரியாவுக்கு அஜீத்துடன் ஒரு படத்திலாவது டூயட் பாட வேண்டும் என்ற கனவு உள்ளதாம். அதற்காக அவர் தீவிரமாக முயற்சித்து வந்துள்ளார். ஆனால், மலையாள நடிகர் பஹத் பாசிலுடன் காதலில் விழுந்ததை அடுத்து அவர்களின் திருமணமும் முடிவாகி விட்டது.
இதனால் நஸ்ரியாவின் அஜீத்துடன் நடிக்கும் கனவு நனவாகவில்லை.ஆனாலும், அஜீத்தை ஒருமுறையாவது நேரில் சந்தித்து பேச வேண்டும் என ஆசைப்படுகிறார் நஸ்ரியா. ஒரு ரசிகையாக அஜீத்துடன் மனம் விட்டு பேசும் நேரத்துக்காக காத்திருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி