அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ரெயில் நிலையங்களில் உருவாகும் ஒய் – ஃபை வசதி…!

ரெயில் நிலையங்களில் உருவாகும் ஒய் – ஃபை வசதி…!

ரெயில் நிலையங்களில் உருவாகும் ஒய் – ஃபை வசதி…! post thumbnail image
சென்னை :- மத்திய ரெயில்வே பட்ஜெட்டில் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏ–1 மற்றும் ஏ வகை ரெயில் நிலையங்களில் வை–பை வசதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ரெயில் பயணிகள் நிலையங்களில் வை–பை வசதியை இலவசமாக பயன்படுத்தலாம். இணைய தள வசதி உள்ள ஸ்மார்ட் போன் வசதி இருந்தால் போதும். இந்த புதிய வசதியால் ரெயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும்.

வை–பை வசதி தமிழகத்தில் ஏ–1 வகை ரெயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், எழும்பூர், மதுரை, கோவை ஆகியவற்றில் விரைவில் வழங்கப்படும்.

‘ஏ’ வகை ரெயில் நிலையங்களான விழுப்புரம், திருச்சி, தஞ்சை, சேலம், ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம், நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல் ஆகியவற்றில் வை–பை அறிமுகம் செய்யப்பட உள்ளது. கேரளாவில் ஏ–1 வகை ரெயில் நிலையமான திருவனந்தபுரத்துக்கும் இந்த வசதி கிடைக்க உள்ளது.

இந்த வசதியால் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலைய பயணிகள் லட்சக்கணக்கானவர்கள் பயன் பெறுவர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி