செய்திகள் பிரேசில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துக்கொண்ட சிறுமி!…

பிரேசில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துக்கொண்ட சிறுமி!…

பிரேசில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துக்கொண்ட சிறுமி!… post thumbnail image
நேபாளம்:-கிழக்கு நேபாள் மாவட்டத்தின் சன்சாரி மாவட்டத்தை சேர்ந்த சிறுமி பராக்யா தாபா(வயது 15). இவர் பிரேசில் அணியின் தீவிர ரசிகை. தபா பிரேசில் எப்படியாவது வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அது நடக்கவில்லை.

பிரேசில் படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து அவளது தாய் மற்றும் தோழிகள் அவரை கேலி செய்துள்ளனர். அவர்கள் ஜெர்மனிக்கு ஆதரவாக இருந்துள்ளனர். அவர்கள் கேலி செய்ததை அடுத்து சிறுமி தாபா தற்கொலை செய்துக் கொண்டார். சிறுமி தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார் என்று நேபாள போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுமியின் தந்தை வளைகுடா நாட்டில் வேலை செய்கிறார். சிறுமியின் தாத்தா, பாட்டி அவரை கவனித்து வந்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி