செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் காயத்திற்கான புகைப்பட ஆதாரத்தை போலீசில் தந்தார் நடிகை ப்ரீத்தி ஜிந்தா!…

காயத்திற்கான புகைப்பட ஆதாரத்தை போலீசில் தந்தார் நடிகை ப்ரீத்தி ஜிந்தா!…

காயத்திற்கான புகைப்பட ஆதாரத்தை போலீசில் தந்தார் நடிகை ப்ரீத்தி ஜிந்தா!… post thumbnail image
மும்பை:-மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் நடித்தவரான நடிகை பிரீத்தி ஜிந்தாவும் அவரது முன்னாள் ஆண் நண்பரான நெஸ் வாடியாவும் தற்போது ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடும் பஞ்சாப் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறார்கள். நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதிய போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

அப்போது நெஸ் வாடியா தன்னிடம் அத்து மீறி நடந்ததாக பிரீத்தி ஜிந்தா மும்பையிலுள்ள மெரைன் டிரைவ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரையடுத்து நெஸ் வாடியா மீது இந்திய தண்டனை சட்டம் 354வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இப்புகார் தொடர்பாக வாடியாவை விசாரித்த போலீசார் அவரை கைது செய்யாமல் இருக்கின்றனர். ப்ரீத்தி தனது புகார் தொடர்பான வாக்குமூலத்தை சில தினங்களுக்கு முன் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் போலீசாரிடம் கொடுத்தார்.

இந்நிலையில் தான் தாக்கப்பட்டது தொடர்பான புகைப்பட ஆதாரத்தை மும்பை போலீசாரிடம் இன்று ப்ரீத்தி வழங்கினார். அவர் அளித்துள்ள புகைப்படத்தில் வாடியா தாக்கியதில், அவரது கையில் ஏற்பட்ட காயங்களின் பதிவுகள் உள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் நான்கு புகைப்படங்களை ப்ரீத்தி வழங்கியுள்ளார். பரீத்தி வழங்கிய புகைப்படங்களை தாங்கள் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்த காவல்துறை அதிகாரி ஒருவர், இவ்வழக்கின் முக்கிய துருப்பு சீட்டாக இந்த புகைப்படங்கள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி