செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் உதயநிதியின் படப்பிடிப்புக்கு தடை…!

உதயநிதியின் படப்பிடிப்புக்கு தடை…!

உதயநிதியின் படப்பிடிப்புக்கு தடை…! post thumbnail image
உதயநிதி ஸ்டாலின்– நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படம் நண்பேன்டா. சந்தானம் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு தஞ்சை மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் நடந்து வருகிறது. தஞ்சை மணிமண்டபம் அருகே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட சிறைக்கூடம் உள்ளது. இது 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இங்கு தற்போது அரசு குழந்தைகள் இல்லம், அரசு கூர்நோக்கு இல்லம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த கூர்நோக்கு இல்ல வளாகத்தில் நண்பேன்டா படப்பிடிப்பு நடத்த திரைப்படக் குழுவினர் திட்டமிட்டனர். இதற்காக கூர்நோக்கு இல்லத்தில் முன்னேற்பாடு பணிகளை செய்தனர்.

பின்னர் படப்பிடிப்பை மேற்கொள்வதற்காக படக் குழுவினர் வளாகத்துக்கு வந்தனர். நடிகர், நடிகைகளும் வந்து இருந்தனர்.

அப்போது சினிமா படப்பிடிப்புக்கு முறையான அனுமதி பெறவில்லை என்பது அலுவலர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த அலுவலர்கள் படப்பிடிப்பு குழுவினரிடம், நீங்கள் உரிய அனுமதி வாங்கவில்லை. எனவே வெளியேறுங்கள் என கூறி அவர்களை வெளியேற்றினர்.

இதையடுத்து படப்பிடிப்பு குழுவினர் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு திருச்சி புறப்பட்டு சென்றனர். இந்த வளாகத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சென்னையில் உள்ள சமூக பாதுகாப்புத்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு முறையான அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தனர்.

இது தொடர்பாக உயர் அலுவலரிடம் அனுமதி பெறுவதற்காக அந்த கடிதம் இயக்குனர் அலுவலகத்தில் இருந்து சமூகநலத்துறை செயலாளர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. அதன் நகல் படப்பிடிப்பு குழுவினரிடம் வழங்கப்பட்டது. இந்த நகலை இயக்குனர் அலுவலகத்தில் அனுமதி பெற்றதாக அரசு குழந்தைகள் இல்லத்தில் காட்டி, படப்பிடிப்பு நடத்த முயற்சி செய்ததாகவும் எனவே தான் அவர்கள் வெளியேற்றப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி