செய்திகள்,திரையுலகம் நவீன வசதிகள் கொண்ட கேரவன் வாங்கினார் நடிகர் மோகன்லால்!…

நவீன வசதிகள் கொண்ட கேரவன் வாங்கினார் நடிகர் மோகன்லால்!…

நவீன வசதிகள் கொண்ட கேரவன் வாங்கினார் நடிகர் மோகன்லால்!… post thumbnail image
கேரளா:-நடிகர் நடிகைகள் படப்பிடிப்பு தளத்தில் கேரவனில்தான் தங்குவார்கள். இது குளிர்பதனம் செய்யப்பட்ட சொகுசு நடமாடும் அறை போன்றது. கழிப்பிட வசதி, படுக்கை வசதி உள்ளிட்ட பல வசதிகள் இதில் இருக்கும். ஒரு நாளைக்கு 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வாடகை உள்ள கேரவன்கள் உள்ளது. பல நடிகர்கள் சொந்த கேரவன் வைத்திருப்பார்கள். அதற்குரிய வாடகையை தயாரிப்பாளர்களிடம் வசூல் செய்து கொள்வார்கள்.

ஆனால் மலையாள சினிமாவில் கேரவன் என்பது ரொம்ப அபூர்வம். மம்முட்டி, மோகன்லால், திலீப்குமார், பிருத்விராஜ் போன்ற சில முக்கிய நடிகர்கள் மட்டுமே கேரவன் பயன்படுத்துவார்கள். அதுவும் அவர்களது சொந்த கேரவனாக இருக்கும். கேரவனுக்கான பெட்ரோல் மட்டும் தயாரிப்பாளர் போட வேண்டும்.இப்போது மோகன்லால் அதி நவீன வசதிகள் கொண்ட கேரவன் ஒன்றை வாங்கியிருக்கிறார்.

இதில் 7 நட்சத்திர ஓட்டல் அறையின் அத்தனை வசதிகளும் உள்ளது. படுக்கை அறை, ரீடிங் ரூம், சேட்டிலைட் டி.வி. வசதி, மைக்ரோவேவ் கிச்சன், சிறிய இசை அரங்கம், மினி தியேட்டர், மசாஜ் நாற்காலி என அத்தனை வசதிகளும் இதனுள் இருக்கிறது. உள்ளே இருந்து கொண்டு கேரவனை சுற்றியுள்ள கேமரா மூலம் வெளியில் நடப்பதை பார்க்க முடியும். தென்னிந்திய நட்சத்திரங்கள் பயன்படுத்தும் கேரவன்களில் இதுதான் நவீனமானது என்கிறார்கள். விலை இரண்டு கோடி என்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி