செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் தென்னாப்பிரிக்காவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்!…

தென்னாப்பிரிக்காவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்!…

தென்னாப்பிரிக்காவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்!… post thumbnail image
ஜோகன்னஸ்பர்க்:-தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரை நகரமான டர்பனில் இரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 80 பேர் படுகாயமடைந்தனர்.டர்பன் அருகே உள்ள பெரியா என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விபத்தில் இதுவரை யாரும் பலியாகவில்லை என மீட்பு பணியில் ஈடுபடும் ஈ24 மீட்பு குழு செய்தி தொடர்பாளரான லுயாண்டா மஜிஜா கூறியுள்ளார். அக்குழுவின் மற்றொரு செய்தி தொடர்பாளரான ரஸல் மீரிங் கூறுகையில், இரு ரெயில்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் காயம் அடைந்தவர்கள் யாரும் அபாய கட்டத்தில் இல்லை என்று கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி