செய்திகள்,திரையுலகம் 3 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் தமிழ் படம்!…

3 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் தமிழ் படம்!…

3 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் தமிழ் படம்!… post thumbnail image
சென்னை:-கரண், புதுமுகம் ஷிபாலி சர்மா, மணிவண்ணன் நடித்த படம் சூரன். பாலு நாராயணன் இயக்கி இருந்தார். பி.பி.பாலாஜி இசை அமைத்திருந்தார். கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படம் 3 வருடங்களுக்கு முன்பே ரெடியாகிவிட்டது. பல்வேறு பிரச்னைகள் காரணமாக தடைபட்டிருந்த இந்தப் படம் வருகிற 11ம் தேதி ரிலீசாகிறது.

இந்தப் படத்தில் நம்பிக்கையோடு அறிமுகமான ஹீரோயின் ஷிபாலி சொந்த ஊருக்கே திரும்பிச் சென்று விட்டார். கரண் நடித்த கந்தா படமும் தயாராகி இரண்டு வருடங்களுக்கு பிறகுதான் ரிலீசானது. இரண்டு முகம் படம் இன்னும் ரிலீசாகாமல் இருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி