செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு பிரேசில் வீரர் நெய்மருக்கு காயத்தை ஏற்படுத்திய கொலம்பிய வீரருக்கு கொலை மிரட்டல்!…

பிரேசில் வீரர் நெய்மருக்கு காயத்தை ஏற்படுத்திய கொலம்பிய வீரருக்கு கொலை மிரட்டல்!…

பிரேசில் வீரர் நெய்மருக்கு காயத்தை ஏற்படுத்திய கொலம்பிய வீரருக்கு கொலை மிரட்டல்!… post thumbnail image
சாபாவ்லோ:-உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் நெய்மர். பிரேசிலை சேர்ந்த இவரது ஆட்டம் உலக கோப்பையில் மிகவும் சிறப்பாக இருந்தது. 4 கோல்கள் அடித்ததோடு அவரது உலக கோப்பை கனவு முடிந்தது. கொலம்பிய வீரர் ஏற்படுத்திய காயம் காரணமாக அவர் எஞ்சிய ஆட்டத்தில் விளையாட முடியாத நிலை உருவானது.

கொலம்பியா அணிக்கு எதிராக கால் இறுதி ஆட்டத்தில் பந்தை எடுக்க முயன்ற போது நெய்மரை அந்த அணி வீரர் ஜூவான் ஜூனிகா முழங்கால் மூலம் முதுகில் தாக்கினார். இதனால்தான் அவருக்கு முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாகவே நெய்மர் உலக போட்டியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது.நெய்மர் மீது காயம் ஏற்படுத்திய கொலம்பிய வீரர் ஜூவான் ஜூனிகா மீது பிரேசில் ரசிகர்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். சமூக இணைய தளங்களில் அவரை வசைப் பாடி உள்ளனர்.ஒரு ரசிகர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து தகவல் அனுப்பி உள்ளார். பல ரசிகர்கள் மோசமான வார்த்தைகளால் ஜூவானை திட்டியுள்ளனர்.

மேலும் அவரை அரக்கன் என்றும், கால்பந்து வரலாற்றில் மிகப்பெரிய வில்லன் என்று விமர்சித்து உள்ளனர்.இதற்கிடையே நெய்மரை முதுகில் தாக்கியதற்காக ஜூனிகா வருத்தம் தெரிவித்து உள்ளார். அவர் கூறும் போது, நான் வேண்டுமென்றே அவரை தாக்கவில்லை. நடந்தது ஒரு விபத்து. காயத்தை ஏற்படுத்தும் எண்ணத்தில் விளையாடவில்லை. இதை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நெய்மர் காயத்துக்காக வருத்தம் தெரிவிக்கிறேன். அவர் விரைவில் குணமடைய கடவுளை பிரார்த்திக்கிறேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி