செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் கிராமத்தில் 32 ரூபாயும், நகரத்தில் 47 ரூபாயும் செலவு செய்பவர்கள் ஏழைகளல்ல என ரங்கராஜன் குழு பரிந்துரை!…

கிராமத்தில் 32 ரூபாயும், நகரத்தில் 47 ரூபாயும் செலவு செய்பவர்கள் ஏழைகளல்ல என ரங்கராஜன் குழு பரிந்துரை!…

கிராமத்தில் 32 ரூபாயும், நகரத்தில் 47 ரூபாயும் செலவு செய்பவர்கள் ஏழைகளல்ல என ரங்கராஜன் குழு பரிந்துரை!… post thumbnail image
புதுடெல்லி:-கடந்த 2011ம் ஆண்டு சுரேஷ் தெண்டுல்கர் கமிட்டி ஏழ்மையை வரையறுத்த விதம் பலத்த கண்டனத்தை சந்தித்தது. நாள் ஒன்றுக்கு, நகரத்தில் 33 ரூபாய்க்கு மேலும், கிராமத்தில் 27 ரூபாய்க்கு மேலும் செலவழிப்பவர்களை ஏழைகளாக கருத முடியாது என்று அக்கமிட்டி கூறியது. அதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டில் திட்ட கமிஷன் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, ஏழ்மையை புதிதாக வரையறுக்க பிரதமரின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் சி.ரங்கராஜன் தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டது. ரங்கராஜன் தனது அறிக்கையை மத்திய திட்டமிடல்துறை மந்திரி ராவ் இந்தர்ஜித்சிங்கிடம் சமர்ப்பித்தார்.அதில், நாள் ஒன்றுக்கு நகரத்தில் ரூ.47-க்கு மேலும், கிராமத்தில் ரூ.32-க்கு மேலும் செலவழிப்பவர்களை ஏழைகளாக கருத முடியாது என்று ரங்கராஜன் கமிட்டி கூறியுள்ளது. கடந்த 2009-2010-ல் 45 கோடியே 40 லட்சமாக இருந்த ஏழைகள் எண்ணிக்கை, 2011-2012 நிதியாண்டில் 36 கோடியே 30 லட்சமாக குறைந்து விட்டதாகவும், இதன்மூலம் நாட்டில் 10 பேரில் 3 பேர் ஏழைகள் என்றும் அந்த கமிட்டி கூறியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி