அதே சமயம் நேபாள நாட்டின் பங்களிப்பு பாராட்டக்கூடியதாக உள்ளதாக யுனெஸ்கோ கூறியுள்ளது. அந்நாட்டில் பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை ஒரு சதவிகிதம் மட்டுமே.ஆப்பிரிக்க நாடான புருண்டியில் 2005ல் கல்வி கற்காதவர்களின் எண்ணிக்கை 54 சதவிகிதத்தை எட்டிய நிலையில், அந்நாடு கல்விக்கட்டணத்தை ரத்து செய்தது. அதன் பலனாக தற்போது அந்நாட்டில் 94 சதவிகிதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
குறிப்பாக இந்தியா, இந்தோனேசியா, நைஜர், நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் தான் கல்லாதவர் அதிகமாக உள்ளதாக அது மேலும் கூறியுள்ளது. 2010 முதல் 2012ம் ஆண்டிற்கான இடைப்பட்ட காலத்தில் கல்விக்கு வழங்கும் உதவிகளை இந்திய அரசு நிறுத்தியதே இச்சரிவுக்கு காரணம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி