இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு சுராசை 9 போட்டியில் விளையாடத் தடை விதித்தது. இதுமட்டுமின்றி அவருக்கு 1,00,000 சுவிஸ் பிரான்க்குகள் அபராதம் விதிக்கப்பட்டது. எதிர் அணி வீரரைக் கடிப்பதில் இது அவர் செய்யும் மூன்றாவது குற்றம் என்றும் கூறப்பட்டது. தனது செய்கை குறித்து அவர் பின்னர் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
இருப்பினும் வர்த்தக விளம்பரத் தந்திரங்களில் இந்த செய்கையும் ஒன்றாக தற்போது நுழைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் பிரபல சில்லறை ஆன்லைன் வர்த்தக தளமான டாவோபாவோ தாங்கள் விற்கும் பாட்டில் ஓபனர்களில் வாயை விரியத் திறந்துகொண்டு முகத்தைக் கோபமாக வைத்திருப்பது போன்ற சுராசின் கார்ட்டூன் படத்தைப் போட்டு விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது.போட்டியில் நடந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது தனக்கு இந்த யோசனை தோன்றியதாக இந்த விற்பனையை நடத்தி வரும் வாங் லின் குறிப்பிட்டுள்ளார். இது நல்ல விற்பனை உத்தியாக உள்ளது, தயாரிப்பு தரப்பில் தேவைகளுக்கேற்ப உற்பத்தி செய்து தரமுடியாது என்பதுதான் இதிலுள்ள ஒரே பிரச்சினையாகும் என்று அவர் கூறுகின்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி