செய்திகள்,திரையுலகம் அஞ்சானில் சூர்யா பேசும் பஞ்ச் டயலாக்!…

அஞ்சானில் சூர்யா பேசும் பஞ்ச் டயலாக்!…

அஞ்சானில் சூர்யா பேசும் பஞ்ச் டயலாக்!… post thumbnail image
சென்னை:-சூர்யா, லிங்குசாமியின் அஞ்சான் படத்தில் மும்பை தாதாக்களுடன் மோதும் வேடத்தில் நடித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் அப்படத்தில் டீசர் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ரசிகர்கள் மத்தியில் ஒரு பரபரப்பை உண்டு பண்ணும் நோக்கத்தில் அப்படத்தின் தயாரிப்பாளரான தனஞ்செயன், அஞ்சானில் சூர்யா தாதாக்களுடன் மோதுவதற்கு முன்பு பேசும் ஒரு அதிரடி வசனத்தை வெளியிட்டுள்ளார்.

அதாவது, சின்னதா வேட்டு சத்தம் கேட்டதும் பயந்து பறக்கிறதுக்கு நான் என்ன புறாவா, நின்னு நிதானமா இறையை கொத்திட்டுப்போற கழுகுடா – என்ற அந்த பஞ்ச் டயலாக்கை வெளியிட்டுள்ளார். இந்த டயலாக் வெளியிட்டதுமே சூர்யா ரசிகர்களிடையே பரபரப்பு பத்திக்கொள்ளத் தொடங்கி விட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி