இந்தப்படம் வரலாற்று பின்னணியில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. ராஜமௌலி இயக்கிய மகதீரா தெலுங்குப்படத்தைப்போல் பிரம்மாண்டமான பீரியட் பிலிமாக இந்தப்படத்தை இயக்க இருக்கிறாராம் சிம்புதேவன். மேலும் விஜய், இந்தப்படத்தில் அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், விஜய் ஜோடியாக இரண்டு நாயகிகளை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில், ஸ்ருதிஹாசனும், ஹன்சிகாவும் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஸ்ருதிஹாசன், இப்போது தான் முதன்முறையாக விஜய்யுடன் ஜோடி சேர உள்ளார். ஹன்சிகாவோ, ஏற்கனவே விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்துள்ளார். விரைவில் படம் பற்றிய முழு அறிவிப்புகளையும் இயக்குநர் சிம்புதேவன் அறிவிக்க உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி