செய்திகள்,திரையுலகம் மீண்டும் தமிழுக்கு வரும் யாமி கெளதம்!…

மீண்டும் தமிழுக்கு வரும் யாமி கெளதம்!…

மீண்டும் தமிழுக்கு வரும் யாமி கெளதம்!… post thumbnail image
சென்னை:-பிரகாஷ்ராஜ் தயாரித்து நடித்த ராதாமோகனின் கெளரவம் என்ற படத்தில் நடித்தவர் நடிகை யாமி கெளதம். அப்படத்தைப்பார்த்து பிரபுதேவா, இந்தியில் தான் இயக்கயிருந்த ஆக்சன் ஜாக்சன் படத்தில் மூன்று ஹீரோயினிகளில் ஒருவராக நடிக்க யாமியை அழைத்து சென்றார்.

இப்போது இந்தியில் பல படங்களை கைப்பற்றி அங்கு வளர்ந்து கொண்டிருக்கும் முக்கிய நடிகையாகி விட்டார் யாமி கெளதம். இருப்பினும் தென்னிந்திய மொழிகளிலேயே தான் ஆரம்ப காலத்தில் நடித்து வந்ததால் அவரால் முழுநேர இந்தி நடிகையாக இருக்க முடியவில்லை. அதனால், கோலிவுட், டோலிவுட் டைரக்டர்களுக்கு போன் போட்டு சான்ஸ் கேட்டு வருகிறார் யாமி.

அதோடு, சிங்கிள் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்பதில்லை. இரண்டு ஹீரோயினி சப்ஜெக்ட் மற்றும் வித்தியாசமான கேரக்டர் என்றாலும் கூட நான் நடிப்பேன். அந்த வகையில் எந்த மொழியாக இருந்தாலும வித்தியாசமான பர்பாமென்ஸ் கொடுக்கும் கேரக்டர் கிடைத்தால் பணத்திற்குகூட முக்கியத்துவம் கொடுக்காமல் நடிக்கத்தயாராக இருக்கிறேன் என்றும் அவர்களிடம் தனது நிலையை விளக்கி வருகிறார் யாமி கெளதம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி