செய்திகள்,திரையுலகம் மீண்டும் இசை அமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி!…

மீண்டும் இசை அமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி!…

மீண்டும் இசை அமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி!… post thumbnail image
சென்னை:-இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரின் அம்மாவுமான ஏ.ஆர்.ரெஹானா மச்சி படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனார். அதன் பிறகு அவ்வப்போது சில படங்களுக்கு இசை அமைப்பார். தொடர்ந்து இசை அமைப்பதில்லை. ஆனால் இப்போது மீண்டும் இசை அமைப்பில் தீவிரமாக இறங்கி இருக்கிறார்.

தருண்கோபி, சரண்யா மோகன் நடிக்கும் என்னை ஏதோ செய்து விட்டாய் படத்துக்கு இசை அமைத்து வரும் ரெஹானா அடுத்து முதன் முறையாக கடைசி பக்கம் என்ற திகில் படத்திற்கு இசை அமைக்கிறார்.கி.மாஜினி என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் தர்வேஷ், பிரதீஸ், சவுமியா, ஜெயஸ்ரீ என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இது ஒரு சைக்கோ த்ரில்லர் கதை. இதற்கு ரெஹானவை இசை அமைக்க கேட்டோம். திகில் படத்துக்கு இசை அமைப்பதில்லை. படத்தை முடித்து விட்டு வாருங்கள் எனக்கு பிடித்திருந்தால் இசை அமைக்கிறேன் என்று சொன்னார். படத்தை முடித்து அவரிடம் காட்டியபோது ஆர்வத்துடன் இசை அமைத்து கொடுத்துள்ளார். படத்தின் பின்னணி இசையும் மிரள வைக்கும் என்கிறார் இயக்குனர் கி.மாஜினி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி