செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் லிங்காவில் பஞ்ச் டயலாக் வேண்டாம் என ரஜினி முடிவு!…

லிங்காவில் பஞ்ச் டயலாக் வேண்டாம் என ரஜினி முடிவு!…

லிங்காவில் பஞ்ச் டயலாக் வேண்டாம் என ரஜினி முடிவு!… post thumbnail image
சென்னை:-ரஜினி பஞ்ச் டயலாக் பேசினாலே தியேட்டர்களில் விசில் பறக்கும். அப்படி அவர் பேசும் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வந்ததால், ரஜினி நடிக்கும் படங்களில் கதையை யோசிப்பதற்கும் மேலாக பஞ்ச் டயலாக் பேசுவதில் அதிக காலஅவகாசம் எடுத்துக்கொண்டார்கள் டைரக்டர்கள்.

இப்போது அவரைப்பார்த்து அத்தனை இளவட்ட நடிகர்களும் பஞ்ச் பேசி அதற்கான மரியாதையையே கெடுத்து விட்டனர். விளைவு, தற்போது தான் நடிக்கும் லிங்கா படத்தில் பஞ்ச் டயலாக்கே ரஜினி பேசவில்லையாம். முன்பு இருந்த நிலை வேறு. இப்போது இருக்கிற நிலை வேறு. அதனால் தேவையில்லாமல் பஞ்ச் டயலாக் பேசி வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டாம் என்று நினைக்கிறாராம் ரஜினி.

இந்த செய்தி வெளியானதையடுத்து ரஜினியின் ரசிகர்கள் அனைவரும் இதுபற்றி மேற்படி படக்குழுவிடம் விசாரிக்கத் தொடங்கி விட்டனர். இதைப்பார்த்த கே.எஸ்.ரவிக்குமார், ரஜினிக்காக இப்படத்தில் தனிப்பட்ட முறையில் பஞ்ச் டயலாக் எழுதவில்லை. ஆனால், அவர் சாதாரணமாக பேசும் வசனங்களே பஞ்ச் டயலாக் போன்றுதான் பேசி நடித்திருக்கிறார். அதனால் ரசிகர்கள் குறைபட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது என்று முன்னெச்சரிக்கையாக கூறி சமாளித்திருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி