செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு இந்திய நீச்சல் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஒலிம்பிக் சாம்பியன்!…

இந்திய நீச்சல் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஒலிம்பிக் சாம்பியன்!…

இந்திய நீச்சல் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஒலிம்பிக் சாம்பியன்!… post thumbnail image
புதுடெல்லி:-2008ம் ஆண்டில் பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் உலக சாதனையுடன் 3 தங்கப்பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை ஸ்டெபானி ரைஸ் கடந்த ஏப்ரல் மாதத்தில் நீச்சல் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

26 வயதான ஸ்டீபானி ரைஸ், ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் நீச்சல் அகாடமிகள் அமைத்து இளம் வீரர்–வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளார்.இது குறித்து ஸ்டெபானி ரைஸ் கருத்து தெரிவிக்கையில், உலக நீச்சல் வீரர்களாக உருவாக விரும்பும் இந்திய இளம் வீரர்களின் கனவை நல்ல உள்கட்டமைப்பு வசதி மற்றும் முறையான பயிற்சியின் மூலம் ரிஷி ஸ்போர்ட்ஸ்சுடன் இணைந்து என்னால் நிறைவேற்ற முடியும் என்று நம்புகிறேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி