செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் 175 கோடியில் தயாராகும் ‘பாகுபலி’!…

175 கோடியில் தயாராகும் ‘பாகுபலி’!…

175 கோடியில் தயாராகும் ‘பாகுபலி’!… post thumbnail image
சென்னை:-‘நான் ஈ’ படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாகுபலி’ படத்தின் பட்ஜெட் 175 கோடி ரூபாய் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் தமிழில் ‘மகாபலி’ என்ற பெயரிலும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாம். இது ஒரு சரித்திரப் படமாக உருவாகி வருவதால்தான் படத்தின் பட்ஜெட் இந்த அளவுக்கு உள்ளது என்றும் சொல்கிறார்கள்.

படத்திற்கான ‘எஃபெக்ட்ஸ்’ காட்சிகளை ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’, ‘அவென்சர்ஸ்’ போன்ற படங்களுக்கு பணிபுரிந்த குழு உருவாக்கி வருகிறது. முற்றிலும் உலகத் தரம் வாய்ந்த ஒரு படமாக இந்தப் படம் இருக்கும் என்கிறார்கள். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் இந்தப் படத்தை உலகம் முழுவதும் ஒரே சமயத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.ஆனால், மறுபக்கம் இவ்வளவு செலவு செய்து எடுத்தால் அவ்வளவு தொகையையும் எடுக்க முடியுமா என்றும் டோலிவுட்டில் சந்தேகம் எழுப்புகிறார்கள். படத்தின் முக்கிய நாயகனான பிரபாஸ் தெலுங்கில் இன்னும் மிகப் பெரிய ஹீரோவாக அங்கீகாரம் பெறவில்லை. அதோடு, தெலுங்கில் அவருடைய வியாபாரம் 40 கோடி முதல் 50 கோடி வரைதான் உள்ளது என்கிறார்கள். அப்படியிருக்க எப்படி 175 கோடிக்கு மேல் வசூல் செய்ய முடியும் என்று கேள்வி எழுப்புகிறார்கள். படத்தின் நாயகியாக அனுஷ்கா நடிப்பதால், அவரை வைத்துத்தான் தமிழில் வியாபாரம் செய்ய முடியும்.

ராஜமௌலியின் முந்தைய படங்களான ‘மகதீரா, நான் ஈ’ ஆகிய படங்களுக்கு தமிழில் வரவேற்பு இருந்தது. அதனால் அவரைப் பற்றிய பரிச்சயம் தமிழ் ரசிகர்களுக்கு உண்டு. எனவே, அதையும் சேர்த்து பிரம்மாண்டமான விளம்பரங்கள் மூலமும் படத்தை இந்திய அளவில் மட்டுமம் அல்லாது, உலக அளவிலும் திரும்பிப் பார்க்க வைக்கும் படமாக கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளதாம்.
2015 கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி