அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் இந்தியாவிற்கு எதிராக போர் தொடுக்க ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத தளபதி உறுதி…!

இந்தியாவிற்கு எதிராக போர் தொடுக்க ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத தளபதி உறுதி…!

இந்தியாவிற்கு எதிராக போர் தொடுக்க ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத தளபதி உறுதி…! post thumbnail image
புதுடெல்லி :- ரம்ஜான் தின உரையில் தீவிரவாதி பாத்ரி இதனை குறிப்பிட்டுள்ளார். ஈராக்கில் ஷியா ஆதரவு அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற அமைப்பின் தீவிரவாதிகள் சண்டையிட்டு வருகிறார்கள். தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிய நகரங்களை மீட்க ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் இடையே பலத்த சண்டை நடைபெற்று வருகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ். சன்னி தீவிரவாதிகள் தாங்கள் ஏற்கனவே சிரியா நாட்டில் கைப்பற்றிய பகுதிகளையும், ஈராக்கின் வடக்கு எல்லையோரம் கைப்பற்றிய பகுதிகளையும் ஒன்றாக இணைத்து இஸ்லாமிய நாடு என்ற ஒரு நாட்டை உருவாக்கினர். ஈராக் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சிரியாவின் நகரம் ஒன்றை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தளபதி இப்ராஹிம் அவாத் அல் பாத்ரி ஆற்றிய 19 நிமிட ரம்ஜான் தின உரை இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்தியா, சீனா, பாலஸ்தீனம், சோமாலியா, அரேபிய தீபகற்பம், ஷாம் (தி லெவான்ட்), எகிப்து, இராக், இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், பிலிப்பின்ஸ் ஆவாஸ், ஈரான், பாகிஸ்தான், துனிசியா, லிபியா, அல்ஜீரியா, மொராக்கோ உள்ளிட்ட நாடுகளில் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. சிறையில் உள்ள கைதிகள் துயரத்தில் உள்ளனர். அவர்கள் உதவி கேட்டு அழுகிறார்கள். ஆதரவு இல்லாமல் நிற்போரும் விதவைகளும் தமது வேதனைகளை வெளியில் கொட்டி புலம்புகிறார்கள். எனவே, உங்கள் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்படும் புனிதப்போரை இஸ்லாமிய தேசம் நம்பிக்கையுடன் கவனிக்கிறது. உலகின் பலபகுதிகளில் உங்களின் சகோதரர்கள் பல்வகை கொடூரத்துக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். இவ்வாறு அல் பாத்ரி தெரிவித்துள்ளார். இந்த எச்சரிக்கையை அடுத்து உலக நாடுகள் பாதுகாப்பை தீவிரப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தீவிரவாதிகளின் இத்தகையை ஏச்சரிக்கையால் ஈராக்கில் சிக்கியுள்ள இந்தியர்கள் நிலை குறித்து கவலை எழுந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி