அரசியல்,செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் மீண்டும் சினிமாவில் நடிக்க மாட்டேன் – விஜயகாந்த் அதிரடி…!

மீண்டும் சினிமாவில் நடிக்க மாட்டேன் – விஜயகாந்த் அதிரடி…!

மீண்டும் சினிமாவில் நடிக்க மாட்டேன் – விஜயகாந்த் அதிரடி…! post thumbnail image
சேலம் :- தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உங்களுடன் நான் என்ற நிகழ்ச்சி மூலம் கட்சி தொண்டர்களை சந்தித்து வருகிறார். சேலத்தில் உங்களுடன் நான் நிகழ்ச்சி 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் சேலம் மாநகர் மாவட்டம், கிழக்கு, மேற்கு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

விஜயகாந்த் மண்டபத்துக்குள் வந்ததும் கதவு பூட்டப்பட்டது. அவர் தொண்டர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது தொண்டர்கள் சினிமாவில் மீண்டும் நடிப்பீர்களா? என்று கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த விஜயகாந்த், உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் நீண்ட நேரம் பேச முடியாது. இருப்பினும் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறுகிறேன். சினிமாவில் நடித்து 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இனிமேல் சினமாவில் நடிக்க ஆசை இல்லை. எனக்கு பதில் எனது மகன் சினிமாவில் நடிக்கிறார் என்று கூறினார். பின்னர் கட்சி தொண்டர்கள் விஜயகாந்துடன் நின்று போட்டோ எடுத்து கொண்டனர்.

தொடர்ந்து நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். அப்போது 2016–ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சிறப்பான வெற்றி பெற கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இப்போதே தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று விஜயகாந்த் கூறினார்.

அவர் பேசியதாவது:– நான் தொண்டர்களை சந்திக்க ஆசைப்பட்டேன். அதற்காக ஒவ்வொரு மாவட்டமும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். தே.மு.தி.க.வை அடமானம் வைத்து விடுவேன் என்று சிலர் கூறுகிறார்கள். கட்சியில் உள்ள ஒரு தொண்டனை கூட அடமானம் வைக்க மாட்டேன். 2016–ல் தே.மு.தி.க. மாபெரும் சக்தியாக விளங்கும். ஒவ்வொரு ஒன்றியத்திலும் மாதந்தோறும் 1000 புதிய உறுப்பினர்களை சேர்த்து கட்சியை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி