செய்திகள்,திரையுலகம் தயாரிப்பாளராகிறார் விஜய்!…

தயாரிப்பாளராகிறார் விஜய்!…

தயாரிப்பாளராகிறார் விஜய்!… post thumbnail image
சென்னை:-நான் சின்ன வயதாக இருந்தபோது, கோயிலுக்கு ஆடு, கோழி பலியிடுவதைப் பார்த்ததில் இருந்தே அசைவம் சாப்பிட மாட்டேனாம். இந்த விசயத்தை என் அம்மா என்னிடம் சொன்ன பிறகுதான் ஏன் இதையே ஒரு திரைக்கதை அமைத்து படமாக்கக்கூடாது என்று நினைத்தபோதுதான் இந்த சைவம் ஸ்கிரிப்ட் உருவானது என்று சொன்னார் டைரக்டர் விஜய்.

அப்படி தனது சொந்த வாழ்வில் நடந்த கதையை அவர் படமாக்கி தற்போது வெளியிட்டுள்ளார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவு ஹிட்டாகவில்லை. அதனால் அடுத்து ஒரு மலையாள படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார் விஜய். ஏற்கனவே மலையாளத்தில் வெளியான கிரீடம் என்ற படத்தையே தமிழில் கிரீடம் என்ற பெயரில் அஜீத்தை வைத்து இயக்கிய விஜய், இந்த முறை ஷட்டர் என்ற படத்தை ரீமேக் செய்கிறார்.

ஆனால், அந்த படத்தை அவர் இயக்கப்போவதில்லையாம். ஒரு தயாரிப்பாளராக மட்டுமே செயல்படப்போகிறாராம். அதனால் மலையாளத்தில் ஷட்டர் அடைக்கப்பட்ட ஒரு கடைக்குள் நடப்பதை முக்கிய கருவாகக் கொண்டு ஜாய் தாமஸ் என்பவர் இயக்கிய அந்த படத்தை தமிழில இயக்கும் பொறுப்பை எந்த டைரக்டரிடம் கொடுக்கலாம், யார் யாரை நடிக்க வைக்கலாம் என்ற விவாதத்தில் தற்போது ஈடுபட்டுள்ளார் டைரக்டர் விஜய்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி