ஜம்மு:-ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் யாத்திரீகர்கள் ஜம்மு வழியாக பயணம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டும் அமர்நாத் யாத்திரை தொடங்கி உள்ளது.
கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய இந்த ஆண்டு தரிசனத்தின் நான்கவது நாளான நேற்று மட்டும் 15 ஆயிரத்து 812 யாத்திரீகர்கள் பனி லிங்கத்தை தரிசித்து வழிபாடு செய்ததாகவும், மொத்தம் 4 நாட்களில் 50,528 யாத்திரீகர்கள் தரிசனம் செய்துள்ளதாகவும் அமர்நாத் ஆலயத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி