அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் மன்னிப்பு கேட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யின் மனைவி…!

மன்னிப்பு கேட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யின் மனைவி…!

மன்னிப்பு கேட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யின் மனைவி…! post thumbnail image
கொல்கத்தா :- நடிகரும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான தபஸ்பால் கம்யூனிஸ்டு கட்சியை தாக்கி பேசும் போது, ‘‘அந்த கட்சியின் தொண்டர்களை கொலை செய்து அவர்களது மனைவிமார்களை கற்பழிக்க வேண்டும்’’ என்று ஆவேசமாக கூறினார்.

அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தேசிய பெண்கள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் திரிணாமுல் காங்கிரசும், அவரிடம் 48 மணி நேரத்துத்துக்குள் விளக்கம் அளிக்கமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதற்கிடையே தபஸ்பால் எம்.பி.யின் பேச்சுக்காக அவரது மனைவி நந்தினிபால் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக அறிவித்துள்ளார். அவரது பேச்சை ஆதரிக்கவில்லை. அதே சமயம் அவரை அவ்வாறு பேசுமாறு தூண்டி விட்டிருக்கிறார்கள். அதன் பின்புறம் உள்ள முழு கதையையும் தெரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி