செய்திகள்,திரையுலகம் பிரபல நடிகருடன் நடிகை பிரியாமணி காதல்?….

பிரபல நடிகருடன் நடிகை பிரியாமணி காதல்?….

பிரபல நடிகருடன் நடிகை பிரியாமணி காதல்?…. post thumbnail image
சென்னை:-பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமானவர் பிரியாமணி. அதன் பிறகு கிளாமராக நடிக்கத் தொடங்கிய பிரியாமணி தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு மற்றம் கன்னட படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

பெங்களூரைச் சேர்ந்த பிரியாமணி கன்னட நடிகர்களுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தார். சித்தார்த், பிருத்விராஜ் ஆகியோருடன் கிசுகிசுக்கப்பட்ட பிரியாமணி தற்போது கன்னட நடிகர் கோவிந்தை காதலித்து வருவதாக சமீபகாலமாக செய்திகள் வெளியாகி வருகிறது.வழக்கமாக எந்த செய்தியையும் உடனே மறுத்துவிடும் பிரியாமணி கோவிந்துடனான காதலை இதுவரை மறுக்கவில்லை.

மாறாக என் காதல் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. சரியான நேரம் வரும்போது சரியான தகவலை சொல்வேன் என்று மட்டும் கூறியிருந்தார்.இந்தநிலையில் கோவிந்த் தனது பேஸ்புக்கில் பிரியாமணியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படைத்தை வெளியிட்டு நாங்கள் இப்படித்தான் அடிக்கடி போட்டோ எடுத்துக் கொள்வோம் என்று ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். இதனால் பிரியாமணியும், கோவிந்தும் காதலிப்பது உறுதி என்கிறது சாண்டல்வுட்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி