செய்திகள்,விளையாட்டு உலகக் கோப்பை கால்பந்து: ஜெர்மனி காலிறுதிக்கு முன்னேற்றம்!…

உலகக் கோப்பை கால்பந்து: ஜெர்மனி காலிறுதிக்கு முன்னேற்றம்!…

உலகக் கோப்பை கால்பந்து: ஜெர்மனி காலிறுதிக்கு முன்னேற்றம்!… post thumbnail image
ரியோ டி ஜெனிரோ:-பிரேசிலில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் அல்ஜீரியாவுடன் மோதியது ஜெர்மனி.ஆட்டம் தொடங்கிய நேரத்தில் இருந்து முடிவு நேரமான 90வது நிமிடம் வரை பரபரப்பாக விளையாடிய இரு அணிகளுமே தங்களது கோல் கணக்கில் முதல் பற்றினை வைக்க முடியாமல் திணறின.

இதனால், இன்றைய வெற்றி – தோல்வி ‘பெனால்டி ஷூட்’டில் தான் இறுதி செய்யப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில், கூடுதல் நேரத்தின் 92-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ஆண்ட்ரே ஸ்குயெர்ல் தனது நாட்டின் சார்பில் முதல் கோலினை பதிவு செய்தார்.120-வது நிமிடத்தில் அதே நாட்டை சேர்ந்த மற்றொரு வீரரான மெசுட் ஓசில் இரண்டாவது கோலையும் அடிக்க, ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த பார்வையாளர்கள் பலத்த கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

அந்த ஆரவாரத்தை தங்கள் பக்கம் திருப்பிக் கொள்ளும் விதமாக அல்ஜீரியாவின் சார்பில் அப்டெல்மவ்மென் ட்ஜாபு முதல் கோலினை பதிவு செய்ய, அதற்கு அடுத்த ஓரிரு நிமிடங்களில் கூடுதலாக வழங்கப்பட்ட நேரம் முடிவடைந்ததை குறிக்கும் நடுவரின் விசில் ஒலி, ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.இதனையடுத்து 2-1 என்ற கணக்கில் ஒரு கோல் வித்தியாசத்தில் அல்ஜீரியாவை வென்ற ஜெர்மனி அணி காலிறுதிக்கு முன்னேறியது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி