செய்திகள்,திரையுலகம் யாரையும் புண்படுத்தி பேசவில்லை – ஆஸ்கார் ரவிச்சந்திரன் பேச்சு…!

யாரையும் புண்படுத்தி பேசவில்லை – ஆஸ்கார் ரவிச்சந்திரன் பேச்சு…!

யாரையும் புண்படுத்தி பேசவில்லை – ஆஸ்கார் ரவிச்சந்திரன் பேச்சு…! post thumbnail image
திருமணம் எனும் நிக்கா படத்தில் யாரையும் புண்படுத்தவில்லை என்று தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அறிவித்து உள்ளார். இந்த படத்தில் ஜெய், நஸ்ரியா ஜோடியாக நடித்துள்ளனர். அனீஸ் இயக்கியுள்ளார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீசாக உள்ளது.

திருமணம் எனும் நிக்கா படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதை பார்த்த முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இஸ்லாமியர்களை புண் படுத்தும் காட்சிகள் படத்தில் உள்ளதென்றும் எனவே இப்படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என்றும் வற்புறுத்தினர். இதனால் படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில் படம் குறித்து தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் வெளிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

திருமணம் எனும் நிக்கா எல்லோருக்கும் பொதுவான படம். இந்த படத்தில் யாரையும் புண் படுத்தவோ காயப்படுத்தவோ இல்லை. ஒவ்வொரு மதத்துக்குள்ளும் கலாசார பெருமையை வெளிப்படுத்தும் படமாகத் தான் இருக்கும். புரிதல் அவசியம் என்ற கருத்தும் இதில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. கணவன், மனைவிக்கிடையே ஆகட்டும், பிள்ளைகள் இடையே ஆகட்டும் நண்பர்கள் இடையே ஆகட்டும் நம்முடன் பணிபுரியும் சகாக்கள் இடையே ஆகட்டும் எல்லோரிடமும் பரஸ்பரம் உறவை மேம்படுத்த புரிதல் அவசியம்.

திருமணம் எனும் நிக்கா மதங்கள் இடையே கூட கலாசாரம் வாயிலாக புருதல் அவசியம் என்பதை வலியுறுத்தும் படம். இந்த படத்தை சூழ்ந்து இருந்த பிரச்சினைகள் முடிந்து விட்டது. இஸ்லாமிய சகோதரர்கள் நோன்பு காலம் முடிந்த பின்னர் படத்தை கண்டு ரசிக்கும் வகையில் ரம்ஜான் பண்டிகையன்றோ அதற்கு பிறகோ படம் வெளியாகும். இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி