செய்திகள்,திரையுலகம் நடிகைகள் பாட எதிர்ப்பு தெரிவிக்கும் இசையமைப்பாளர்…!

நடிகைகள் பாட எதிர்ப்பு தெரிவிக்கும் இசையமைப்பாளர்…!

நடிகைகள் பாட எதிர்ப்பு தெரிவிக்கும் இசையமைப்பாளர்…! post thumbnail image
தமிழ் பட உலகில் நடிகைகள் பலர் பாடகிகளாகி வருகின்றனர். ஆண்ட்ரியா ஏற்கனவே பல படங்களில் பாடி உள்ளார். ரம்யாநம்பீசன் பாண்டிய நாடு படத்தில் பைபை பாடலை பாடி பாடகியானார். லட்சுமிமேனனும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் ஒரு பாடலை பாடி உள்ளார். சினேகாவையும் பாட அழைத்துள்ளனர். மேலும் பல நடிகைகளும் பாடுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் பின்னணி பாடகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். நடிகைகளை பாடகிகளாக்குவதற்கு இசையமைப்பாளர் எஸ்.எஸ். குமரன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

அவர் கூறியதாவது:–

படங்களில் நடிகைகளை பாட வைக்கும் போக்கு அதிகரிக்கிறது. ஆனால் நான் அவர்களை பாட வைக்க மாட்டேன். நடிகைகளுக்கு தமிழ் டப்பிங் பேசவே தெரியவில்லை. வேறு டப்பிங் கலைஞர் குரல் கொடுக்கிறார். இவர்கள் தமிழ் பாடல்கள் பாடினால் எப்படி இருக்கும். நவீன தொழில் நுட்பத்தில் அவர்களை பாட வைத்து விடலாம். ஆனாலும் அப்பாடலில் ஜீவன் இருக்காது.

திறமையான பாடகர் பாடகிகளுக்கு வாய்ப்பளிக்க இணையதளத்தில் குரல் வங்கியொன்றை தொடங்கியுள்ளேன். பூ, களவாணி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தேன். தேநீர் விடுதி, கேரள நாட்டிளம் பெண்களுடனே போன்ற படங்களை இயக்கினேன். தற்போது இயக்குவதை நிறுத்தி வைத்து விட்டு முழு நேர இசையமைப்பாளராக இறங்கியுள்ளேன். இனிப்பு காரம் மற்றும் அங்காடி தெருவின் கன்னட ரீமேக் படங்களுக்கு இப்போது இசையமைத்துக் கொண்டு இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி