செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் மைனர் பெண்ணை கற்பழித்ததாக நடிகர் ஷாருக்கானின் கார் டிரைவர் கைது!…

மைனர் பெண்ணை கற்பழித்ததாக நடிகர் ஷாருக்கானின் கார் டிரைவர் கைது!…

மைனர் பெண்ணை கற்பழித்ததாக நடிகர் ஷாருக்கானின் கார் டிரைவர் கைது!… post thumbnail image
மும்பை:-மும்பை அந்தேரியில் உள்ள அசல்பா பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர கவுதம் (வயது 34). இவர் இந்தி நடிகர் ஷாருக்கான் வீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் பாந்திரா பகுதியில் உள்ள ஒரு நடிகை வீட்டில் வேலை செய்யும் 17 வயது மைனர் பெண்ணுக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டது.

கார் டிரைவர் ராஜேந்திர கவுதம் அந்த பெண்ணிடம் நடிகர் ஷாருக்கான் வீட்டில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறினார். சம்பவத்தன்று ராஜேந்திர கவுதம், நடிகையின் வீட்டுக்கு அங்கு வேலை செய்யும் பெண்ணிடம் பேசுவதற்காக போன் செய்தார். எதிர்பாராத விதமாக அந்த போன் அழைப்பை நடிகை எடுத்தார். ஆனால், வேலைக்கார பெண்ணிடம் தான் பேசுவதாக நினைத்துக் கொண்டு, நடிகர் ஷாருக்கான் வீட்டில் வேலைவாய்ப்பு பற்றி அவர் பேசினார்.இதைத் தொடர்ந்து அந்த வேலைக்கார பெண்ணை நடிகை வேலையை விட்டு நீக்கினார். இதனால் வேலையிழந்து நின்ற பெண்ணை ராஜேந்திர கவுதம் சந்தித்தார். அப்போது நடிகர் ஷாருக்கான் தற்போது மும்பையில் இல்லை, மும்பை திரும்பியதும் அவரது பங்களாவில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்தார்.

அதுவரை தங்குவதற்கு வசதி ஏற்படுத்தி தருவதாக கூறி, கடந்த 20-ந் தேதி நாலச்சோப்ராவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றார் அங்கு வைத்து அவர் மைனர் பெண்ணை கற்பழித்ததாக தெரிகிறது. பின்னர் இதை யாரிடமும் தெரிவித்தால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அந்த பெண்ணுக்கு கார் டிரைவர் மிரட்டல் விடுத்தார். மேலும் சொந்த ஊருக்கு திரும்பி செல்லும்படியும் அவர் வலியுறுத்தினார்.ஆனால், அந்த பெண் பாந்திரா போலீஸ் நிலையத்துக்கு சென்று தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் ஷாருக்கானின் கார் டிரைவர் ராஜேந்திர கவுதமை கைது செய்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி