செய்திகள்,திரையுலகம் விஜய்யின் ‘கத்தி’படப்பிடிப்புக்கு அனுமதி மறுப்பு!…

விஜய்யின் ‘கத்தி’படப்பிடிப்புக்கு அனுமதி மறுப்பு!…

விஜய்யின் ‘கத்தி’படப்பிடிப்புக்கு அனுமதி மறுப்பு!… post thumbnail image
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் கத்தி படத்தின் படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் சில தினங்களுக்கு முன் நடைபெற்று வந்தது. இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில் மூன்றாவது நாள் திடீரென படப்பிடிப்பு நடத்த கொடுத்த அனுமதியை சென்னை விமானநிலைய அதிகாரிகள் ரத்து செய்துவிட்டனர்.

அதனால், அதிர்ச்சி அடைந்த கத்தி படக்குழுவினர் வேறு வழியின்றி உடனடியாய் ஐதராபாத் விமானநிலையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்று அங்கு படப்பிடிப்பை மாற்றியுள்ளனர்.தீவிரவாதிகள் அப்பாவி மக்களை பணயக்கைதிகயாக பிடித்து வைத்துக்கொள்வதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படம் கத்தி. எனவே சென்னை விமான நிலையத்தில் பெரும்பாலான காட்கிளை எடுக்க வேண்டிய நிலை. அதோடு, கத்தி படத்தின் பாடல் காட்சி ஒன்றையும் அங்கேயே படமாக்க இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விரும்பினார். ஏற்கனவே கடந்த மாதம் இதே விமான நிலையத்தில் சில காட்சிகளை படமாக்கினார் ஏ.ஆர்.முருகதாஸ்.

தற்போது, டூயட் பாடல் காட்சி ஒன்றையும் விமான நிலையத்தில் படமாக்க தினசரி பல லட்சம் கட்டணம் செலுத்தி படப்பிடிப்பை நடத்தி வந்தார். முதல் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு பிரச்சனை இல்லாமல் முடிந்தது. ஆனால் மூன்றாவது நாள் திடீரென படப்பிடிப்புக்காக கொடுத்த அனுமதியை ரத்து செய்த விமான நிலைய அதிகாரிகள், உடனடியாக வெளியேறும்படி உத்தரவிட்டனர். அனுமதி மறுத்ததன் காரணத்தை அதிகாரிகள் கூறவில்லையாம். இதனால் பெரும் ஏமாற்றமும் மன உளைச்சலும் அடைந்தாராம் ஏ.ஆர். முருகதாஸ்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி