செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி நிறைவைடைய பத்தாண்டுகளுக்கு மேல் ஆகலாம் என அறிவிப்பு!…

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி நிறைவைடைய பத்தாண்டுகளுக்கு மேல் ஆகலாம் என அறிவிப்பு!…

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி நிறைவைடைய பத்தாண்டுகளுக்கு மேல் ஆகலாம் என அறிவிப்பு!… post thumbnail image
மலேசியா:-மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. இதனை தேடும் பணி இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தே நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.விடை தெரியாமல் தேடும் பணி முடிவுக்கு வந்தது.

மேலும், காணாமல் போனதற்குப் பின்னரும் கூட பல மணி நேரம், இந்தியப் பெருங்கடல் விமானம் மீது பறந்திருக்கலாம் என்று புதுபுது தகவல்கள் வெளியாகி வருகின்றன.இந்நிலையில், விமானத்தை தேடும் பணி நிறைவடைய இன்னும் பத்தாண்டுகள் நீடிக்கலாம் என்று மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், விமானத்தின் சேதப்பகுதிகள் இந்திய பெருங்கடலின் பெரிய பரப்பில் பரந்து விரிந்து கிடக்க வாய்ப்புகள் உள்ளன.

விமானத்திற்கு சில அசம்பாவிதங்கள் நடந்துள்ளன. விமானம் திரும்பி வந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் விமானத்தால் மீண்டும் தளத்திற்கு வரமுடியாமல் சென்றுள்ளது. அது தென் இந்திய பெருங்கடலின் சில பகுதியில்தான் விபத்துக்குள்ளாகியிருக்கும் என்று நான் நினைக்கிறேன் இவ்வாறு மலேசியன் ஏர்லைன்சின் வணிக தலைவர் ஹக் டன்லேவி மூன்று மாதங்களாக தேடும் பணி நடைபெற்றுவது குறித்து பேசுகையில் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி